Tiruvannamalai Child Death | சிறுமி மீது மோதிய டிராக்டர் - சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான சிறுமி.. தி.மலையில் அதிர்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, டிராக்டர் மோதி 8 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திமூரான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் - கவிதா தம்பதியின் மகள் ஜெயஸ்ரீ, நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டின் அருகே தனது தங்கை, தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பின்னோக்கி வந்த டிராக்டர் மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், டிராக்டரை இயக்கிய பிரகாஷை தேடி வருகின்றனர்