தமிழ்நாடு

வங்கியில் கொள்ளை முயற்சி : 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பியது...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இந்தியன் வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

* செங்கத்தை அடுத்த எறையூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், கடந்த 3 நாட்களாக விடுமுறை என்பதால் நோட்டமிட்ட மர்மநபர்கள் சிசிடிவி கேமராவின் கேபிள்களை துண்டித்தும், பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து விட்டும் உள்ளே நுழைந்துள்ளனர்.

* எனினும், நகை, பணம் இருந்த லாக்கர் உடைக்க

அவர்களால் முடியவில்லை. இந்நிலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை அறிந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

* பின்னர் வங்கி மேலாளரை அழைத்து வந்து பார்த்தபோது 7 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது தெரியவந்தது. மோப்ப நாய் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை