தமிழ்நாடு

செங்கம் அருகே வீசிய பயங்கர சூறாவளி காற்று - 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வீசிய சூறாவளி காற்றில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வீசிய சூறாவளி காற்றில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன. பரமனந்தல், குப்பநத்தம், கள்ளாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஏக்கருக்கு சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவிக்கும் விவசாயிகள், சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்