தமிழ்நாடு

ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி - ஒரே ஆசிரியருடன் இயங்குவதால் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கனகம்மாசத்திரம் அருகே உள்ள கொத்த பனப்பாக்கம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 11 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அவர்களுக்கு தலைமையாசிரியர் உள்ளிட்ட 2 பேர் பாடம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தலைமையாசிரியர் ஓய்வு பெற்றதால் அங்கு படித்த 10 மாணவ-மாணவிகள் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் சாதனா என்ற மாணவி மட்டும் அதே பள்ளியில் படித்து வரும் நிலையில் ஒரே ஆசிரியர் வகுப்பு எடுத்து வருகிறார்.

ஒரு மாணவிக்காக மட்டும் அரசு பள்ளி செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் புதிய தலைமையாசிரியை நியமித்து கூடுதல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு