தமிழ்நாடு

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர். பகலிரவு பாராமல் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கோடை காலத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 1500 ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளனர். விரைவில் சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தாலும் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி