தமிழ்நாடு

பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு : அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி இஸ்லாம் நகரைச் சேர்ந்த சபீனா என்பவருக்கு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சையில் இருந்த சபீனாவை செவிலியர் ஒருவர் வலுக்கட்டாயமாக வேறு இடத்திற்கு மாற்றியபோது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சபீனாவின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், செவிலியர் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்