திருத்தணி வீடியோ - எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் கடிதம்
திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட வீடியோவை பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 22 எக்ஸ் வலைதளப் பதிவுகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழக சைபர் கிரைம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படும் அந்த கணக்குகளை முடக்கத் தவறினால், எக்ஸ் நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சந்தீப் மிட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இந்தத் தாக்குதல் தொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.