தமிழ்நாடு

திருத்தணி : ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி அருகே தாழவேடு பகுதியில் ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தமுயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
திருத்தணி அருகே தாழவேடு பகுதியில் ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தமுயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், திருத்தணி அரசு கல்லூரி விடுதிக்கு வழக்கப்பட்ட அரிசியை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருத்தணி அரசு கல்லூ​ரி விடுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி விடுதி வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்