தமிழ்நாடு

திருத்தணி : ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி அருகே தாழவேடு பகுதியில் ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தமுயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
திருத்தணி அருகே தாழவேடு பகுதியில் ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தமுயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், திருத்தணி அரசு கல்லூரி விடுதிக்கு வழக்கப்பட்ட அரிசியை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருத்தணி அரசு கல்லூ​ரி விடுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி விடுதி வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி