Tirupur | chithirai thiruvizha | திருப்பூர் ஸ்ரீ அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா
ஸ்ரீ அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா கோலாகலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முதலில் பெரிய திருத்தேர் ஏராளமான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பாரம்பரிய இசை முழங்கத்துடன் வீதியில் உலா வந்த தேரின் முன்பு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பாடியும், இதில் ஒருவர் சிவன் போன்று வேடமணிந்து பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், பக்தர்களுக்காக அன்னதானம் மற்றும் நீர்மோர் பந்தல்கள் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன