தமிழ்நாடு

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்

காங்கேயம் அருகே பழமையான கோயிலில் மூலவர் சிலை மீது சூரிய வெளிச்சமும், நிலா வெளிச்சமும் விழுவதால் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது சின்னாரிபட்டி. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படும் "கம்பம்" மாதேசிலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சிதிலமைடைந்த நிலையில் இருந்து சீர்செய்யப்பட்டு 2016ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

அஸ்திவாரமே இல்லாமல் ஒரு பாறையின் மீது அடுக்கடுக்காக கல் வைத்து இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது என தொல்லியல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

இந்த கோயிலில் முருகர், விநாயகர், ஈஸ்வரர், அம்பாள் ஆகிய சிலைகள் மீது, ஆண்டுக்கு 41 நாட்கள் சூரிய வெளிச்சமும், 21 நாட்கள் நிலா வெளிச்சமும் விழுவதாக கூறப்படுகிறது.

கோயிலுக்கு எதிரே, ஒரே கல்லினால் ஆன 33 அடி உயர கம்பம் உள்ளதுடன், அதில் ஏற்றப்படும் தீப ஒளி மூலவர்கள் சிலைகள் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி விழுவதால் கதவுகளும் முழுமையாக மூடப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த கோயிலைப் பற்றிய சிறப்புகள் தற்போதுதான் பரவத் தொடங்கியுள்ளதால் மக்கள் ஆர்வமாக வரத் தொடங்கியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை