தமிழ்நாடு

தன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்

திருப்பூரில், தன் பணம் திருடு போனதால், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கைப்பயை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள நொய்யல் பாலத்தில், பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்த கைப்பயை திருடிக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதைக்கண்ட சிலர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்த சதிஷ் என்பது தெரியவந்தது. தனது பணத்தை யாரோ திருடிக் கொண்டதாகவும், அதனால் அந்தப் பெண்ணின் கைப்பையை திருட முயற்சித்ததாகவும், போலீசில் சதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ