தமிழ்நாடு

தன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்

திருப்பூரில், தன் பணம் திருடு போனதால், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கைப்பயை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள நொய்யல் பாலத்தில், பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்த கைப்பயை திருடிக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதைக்கண்ட சிலர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்த சதிஷ் என்பது தெரியவந்தது. தனது பணத்தை யாரோ திருடிக் கொண்டதாகவும், அதனால் அந்தப் பெண்ணின் கைப்பையை திருட முயற்சித்ததாகவும், போலீசில் சதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு