தமிழ்நாடு

தன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்

திருப்பூரில், தன் பணம் திருடு போனதால், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கைப்பயை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள நொய்யல் பாலத்தில், பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்த கைப்பயை திருடிக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதைக்கண்ட சிலர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்த சதிஷ் என்பது தெரியவந்தது. தனது பணத்தை யாரோ திருடிக் கொண்டதாகவும், அதனால் அந்தப் பெண்ணின் கைப்பையை திருட முயற்சித்ததாகவும், போலீசில் சதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை