தமிழ்நாடு

மூடப்பட்டு இருந்த ரயில் பெட்டி கதவுகள் - ஏறமுடியாமல் தவித்த வடமாநில பயணிகள்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

தந்தி டிவி

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், வாக்களிப்பதற்காக அங்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் வழியாக அஸ்ஸாம் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்ததால், பயணிகளால் அதில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாரம் ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும் ரயிலில் ஏறமுடியாததால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"