தமிழ்நாடு

விவசாய நிலத்திற்கு செல்ல... பாலம் கட்டிய விவசாயி... இடித்து தள்ள வட்டாட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

விவசாய நிலத்திற்கு பாதை அமைத்துக் கொள்வதாக கூறி நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாலத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... திருப்பூர் ஆறுமுத்தாம் பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் தனது பெயரில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்ய பாதை இல்லாததால் அருகில் குட்டை வழியாக பாதை வேண்டும் என பல்லடம் வட்டாட்சியரிடம் அனுமதி வாங்கியுள்ளார்... குட்டையில் உள்ள முட்புதர்களை அகற்றி விவசாயம் செய்ய நடைபாதையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சுப்பிரமணியம் சிறு பாலம் ஒன்றைக் கட்டி பாதை அமைத்துள்ளார்... இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து உடனடியாக புதிதாக கட்டப்படும் பாலத்தை இடித்து அகற்ற வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு