தமிழ்நாடு

விவசாய நிலத்திற்கு செல்ல... பாலம் கட்டிய விவசாயி... இடித்து தள்ள வட்டாட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

விவசாய நிலத்திற்கு பாதை அமைத்துக் கொள்வதாக கூறி நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாலத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... திருப்பூர் ஆறுமுத்தாம் பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் தனது பெயரில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்ய பாதை இல்லாததால் அருகில் குட்டை வழியாக பாதை வேண்டும் என பல்லடம் வட்டாட்சியரிடம் அனுமதி வாங்கியுள்ளார்... குட்டையில் உள்ள முட்புதர்களை அகற்றி விவசாயம் செய்ய நடைபாதையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சுப்பிரமணியம் சிறு பாலம் ஒன்றைக் கட்டி பாதை அமைத்துள்ளார்... இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து உடனடியாக புதிதாக கட்டப்படும் பாலத்தை இடித்து அகற்ற வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்