தமிழ்நாடு

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

* திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழரசனை கைது செய்தனர்.

* இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தமிழரசனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் 10,000 அபராதம் விதித்தும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து தமிழரசனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்