தமிழ்நாடு

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

* திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழரசனை கைது செய்தனர்.

* இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தமிழரசனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் 10,000 அபராதம் விதித்தும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து தமிழரசனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே