தமிழ்நாடு

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு

திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பூரில், ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருப்பூரில் கொரோனா தொடர்பாக ஆய்வுகள் நடத்த, போதிய வசதிகள் இல்லை என தெரிவித்த மருத்துவர்கள், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே108 ஆம்புலன்சில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் சுமார் 4 மணிநேரம் திருப்பூர் அரசு மருத்துவமனையிலேயே அந்த இளைஞர் காத்திருக்க வைக்கப்பட்டார். பின்னர், ஆம்புலன்ஸ் பைலட் மற்றும் மருத்துவ உதவியாளர் என இருவரும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு, அந்த இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை