தமிழ்நாடு

"அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்" - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆம்பூர் நகர பகுதிகள் கட்டுபடுதப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்ட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளளார்.

தந்தி டிவி

கொரோனா தோற்று அதிகம் உள்ள பகுதியான ஆம்பூர் நகரம் முழுவதும் கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்நது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஆம்பூரில் பொதுமக்கள் வெளியே வர வேண்டிய அவசியமில்லை எனவும்

88 வாகனங்கள் மூலம் மளிகை, காய்கரி, மருந்து உள்ளிட்ட அணைத்து பொருட்களும் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார்.

இதேபோல் ஊரடங்கை மீறி வெளியே வந்தால் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு