தமிழ்நாடு

"ரூ.1,000 இருந்தால் போதும்.. வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம்" - இப்படியும் நடக்கும்.. உஷார் மக்களே

தந்தி டிவி

திருப்பத்தூர் அருகே, ஆயிரம் ரூபாய் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் தரப்படும் எனக் கூறி, நூதன மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் - சித்ராதேவி தம்பதி, தனியார் வங்கியில் இருந்து வருவதாகக் கூறி, திருப்பத்தூர் அருகே கள்ளிப்பட்டு பகுதியில் உள்ள மக்களிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். லோன் தேவைப்படுபவர்கள், ஆயிரம் ரூபாய் செயலாக்கக் கட்டணம் செலுத்தினால், ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். அதன்படி, 70 பேரிடம் அந்த தம்பதி பணம் வசூலித்த நிலையில், சந்தேகமடைந்த சிலர், சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, அங்கு வந்த தனியார் வங்கி மேலாளர், அவர்களது அடையாள அட்டையை சோதனை செய்தபோது, போலி என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரையும் பிடித்து, பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு