தமிழ்நாடு

Tirupathur | கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன்...வீடு புகுந்து கள்ளக்காதலன் வெறிச்செயல்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலன் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமர் நகர் பகுதியை சேர்ந்த அப்புன்ராஜ் - ஜீவா தம்பதியருக்கு மகள் மற்றும் மகன் என இருகுழந்தைகள் உள்ளனர். ஜீவா, பிரேம்குமார் என்ற இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்புன்ராஜ், பிரேம்குமாரை கண்டித்துள்ளார். இதையடுத்து ஜீவா, பிரேம்குமார் உடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், நள்ளிரவில் வீடு புகுந்து அப்புன்ராஜை, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்புன்ராஜ், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தப்பி ஓடிய பிரேம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்