Tiruparankundram | சிலிண்டர் தட்டுப்பாடு - திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் எடுத்த முடிவு சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பில் அன்னதானம் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் விறகு அடுப்பில் அன்னதானம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளிலிருந்து எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால், தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், திருப்பரங்குன்றம் மற்றும் அதன் உபகோவில்களில் வழங்கப்படும் அன்னதானத் திட்டம் தடைபடாமல் இருக்க, கோவில் நிர்வாகம் தற்காலிகமாக விறகு அடுப்புகளை அமைத்துள்ளது. சிலிண்டர் விநியோகம் சீராகும் வரை இதே முறையில் சமையல் பணிகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.