தமிழ்நாடு

பிரபல ரவுடியை மடக்கி பிடித்த போலீசார் - நீராவி முருகன் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி நீராவி முருகன் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில், போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், வள்ளியூர் அக்கசாலை அருகே ஒரு வீட்டில் தங்கியிருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது, நீராவி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் தப்ப முன்றபோது, காரின் டயர் கழிவு நீர் கால்வாய்க்குள் சிக்கியது. இதயடுத்து, முருகனை ஆய்வாளர் தேவேந்திரன் நெருங்க முயன்ற போது, அவரை முருகன் அரிவாளால் தாக்கியுள்ளார். உடனே, தேவேந்திரன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, முருகன் மற்றும் அவரது ஓட்டுநரை வளைத்து பிடித்தனர். உடன் இருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், நீராவி முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு