தமிழ்நாடு

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர். வனத்துறையில் காலியாக இருந்த 527 வனகாவலர் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் மலை வாழ் மக்களுக்கு 99 இடம் ஒதுக்கப்பட்டது. இதற்காக, பாபநாசம் மலைப்பகுதிகளில் வசித்து வரும் படித்த இளைஞர்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் பயிற்சி வழங்கியது. இதில் 6 பேர் வெற்றிபெற்று நேர்முகத்தேர்வு வரை சென்ற நிலையில், 2 பெண்கள் வனக்காவலர் பணிக்கு தேர்வாகி பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் வன சரக பகுதியில், அவர்களுக்கு பணிநியமனம் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசை நேரில சந்தித்து, இந்த பெண்கள் வாழ்த்து பெற்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு