தமிழ்நாடு

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர். வனத்துறையில் காலியாக இருந்த 527 வனகாவலர் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் மலை வாழ் மக்களுக்கு 99 இடம் ஒதுக்கப்பட்டது. இதற்காக, பாபநாசம் மலைப்பகுதிகளில் வசித்து வரும் படித்த இளைஞர்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் பயிற்சி வழங்கியது. இதில் 6 பேர் வெற்றிபெற்று நேர்முகத்தேர்வு வரை சென்ற நிலையில், 2 பெண்கள் வனக்காவலர் பணிக்கு தேர்வாகி பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் வன சரக பகுதியில், அவர்களுக்கு பணிநியமனம் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசை நேரில சந்தித்து, இந்த பெண்கள் வாழ்த்து பெற்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்