தமிழ்நாடு

விரிவடையும் 'பசியில்லா நெல்லை' திட்டம் : தனியார் அமைப்புக்கு குவியும் பாராட்டு...

தொண்டு உள்ளங்களால், நிரம்பும் பெட்டி...

தந்தி டிவி

உணவை வீணாக்காமல், பசியில்லா நெல்லை என்ற பசியாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது பலரது பாராட்டையும் பெற்றது. உணவுக்காக ஒருவர் கையேந்துவதை தவிர்க்கவும், தேவைக்கு அதிகமான உணவை வீணாக்குவதை தடுத்து, உணவு தேவை இருப்போருக்கு வழங்கும் விதமாக ஒன்றிணைக்கப்பட்டதே இந்த பசியில்லா நெல்லை திட்டம்.

ஓரிடத்தில் வைக்கப்படும் பெட்டியில், தானம் செய்ய விரும்பும் நல்ல உள்ளங்கள் உணவு, ரொட்டி ஆகியவற்றை வாங்கி பெட்டியில் வைக்கிறது. பசியின் கொடுமை அறிந்த இரக்க குணம் படைத்தவர்கள், உணவுகளை சொந்த செலவில் வாங்கி வைக்கின்றனர். இந்த உள்ளங்களால், அட்சய பாத்திரமாக மாறிப்போன 'பசியில்லா பெட்டியில்' உள்ள உணவுகளை தேடி, பசியால் வாடுவோர், யாருடை அனுமதியும் இன்றி வயிறாற உண்கின்றனர். இந்த 'பசியில்லா நெல்லை' திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்