தமிழ்நாடு

தந்தையை ஏமாற்றி சொத்து அபகரிப்பு : 4 பிள்ளைகளும் மாதம் 10 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்து ஏமாற்றிய நான்கு பிள்ளைகள், வயதான தந்தைக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லையைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியின் மகனான 77 வயது முதியவர் சுடலைமணி. இவரின் நான்கு பிள்ளைகள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்து கொண்டு, தந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டதாக, ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மனு அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், நான்கு பிள்ளைகளும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாதம் மாதம் பணம் வழங்க தவறும் பட்சத்தில் சிறைக்கு செல்ல நேரிடும் என முதியவரின் பிள்ளைகளை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"