தமிழ்நாடு

விவசாயி வெட்டி படுகொலை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

நெல்லையில் விவசாயியை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேகர்.இவர் நேற்று இரவு வாழை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு சென்றுள்ளார்.வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது மகன் ரவீந்தர் அவரை தேடி தோட்டத்திற்குள் சென்றுள்ளார். அப்போது சேகர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு மகன் ரவீந்தர் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக சேகர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்