தமிழ்நாடு

சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

தனியார் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருச்செந்தூர் கோவில் மற்றும் பேருந்து நிலையம் அருகே விடப்படுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தந்தி டிவி

திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெறாத தனியார் விடுதிகள் இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தனியார் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் சாலையில் விடப்படுவதாக கூறபடுகிறது. அதேபோல் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் கழிவுநீர் விடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சாலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி