தமிழ்நாடு

சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

தனியார் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருச்செந்தூர் கோவில் மற்றும் பேருந்து நிலையம் அருகே விடப்படுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தந்தி டிவி

திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெறாத தனியார் விடுதிகள் இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தனியார் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் சாலையில் விடப்படுவதாக கூறபடுகிறது. அதேபோல் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் கழிவுநீர் விடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சாலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்