தமிழ்நாடு

ஆதித்தனார் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பழைய மாணவர்கள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு பி.பி.ஏ. பயின்ற மாணவர்கள் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பழைய மாணவர்கள் வெளிநாடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்தனர். அதில், தங்களது மாணவப்பருவத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைத்ததோடு, கடந்த கால வாழ்க்கை அனுபவங்களையும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ