தீபாவளியை முன்னிட்டு, தீ காயமற்ற விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புதுறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தீ விபத்தை தவிர்க்கலாம் என்று குறிப்பிடும் அவர்கள், அரசு அனுமதித்துள்ள நேரத்தில் முறையாக பட்டாசுகளை கையாண்டால் விபத்து தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.