தமிழ்நாடு

டிக் டாக் பிரபலம் திவ்யா கைது

அவதூறாக பேசியதாக டிக் டாக் பிரபலம் திவ்யாவை தேனி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

தேனி மாவட்டம் தஞ்சாவூரை சேர்ந்தவர் திவ்யா. டிக் டாக் பிரபலமான இவர்,

தனியாக யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திவ்யா மீது ஏற்கனவே புகார்கள் அதிகம் எழுந்தன. இதனிடையே நாகலாபுரத்தை சேர்ந்த டிக் டாக் பிரபலமான பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக திவ்யா மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தேனி சைபர் க்ரைம் போலீசார் திவ்யாவை தேடி வந்தனர். தலைமறைவான திவ்யா, நாகூரில் இருந்தது உறுதியான நிலையில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திவ்யா, நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே திருநங்கைகள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை