சபரிமலையில் இரண்டு இளம்பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தில் ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூரில் உள்ள கேரளா ஆளுநர் சதாசிவத்தின் வீட்டை, விசுவ ஹிந்து பரீஷத் அமைப்பினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.