தமிழ்நாடு

விஷத்தால் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழப்பு....

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் விஷம் கலந்த மாமிசத்தை சாப்பிட்டு அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்துள்ளது.

முக்கட்டி கிராமப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு புலி வாயில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியை சுற்றி ஆய்வு நடத்தினர். அப்போது மற்றொரு புலியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு புலிகளையும் ஒன்றாக வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த புலிகளின் வயிற்றில் மாமிசம் இருந்தது, தெரியவந்தது. பிறகு புலிகளின் கால்தடத்தை பின் தொடர்ந்ததில் அதே தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டுப்பன்றி ஒன்று இறந்துகிடந்தது. காட்டுப்பன்றியை ஆய்வு செய்ததில், அதன் உடம்பில் விஷம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தனிக்குழு அமைத்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்