தமிழ்நாடு

விஷத்தால் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழப்பு....

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் விஷம் கலந்த மாமிசத்தை சாப்பிட்டு அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்துள்ளது.

முக்கட்டி கிராமப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு புலி வாயில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியை சுற்றி ஆய்வு நடத்தினர். அப்போது மற்றொரு புலியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு புலிகளையும் ஒன்றாக வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த புலிகளின் வயிற்றில் மாமிசம் இருந்தது, தெரியவந்தது. பிறகு புலிகளின் கால்தடத்தை பின் தொடர்ந்ததில் அதே தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டுப்பன்றி ஒன்று இறந்துகிடந்தது. காட்டுப்பன்றியை ஆய்வு செய்ததில், அதன் உடம்பில் விஷம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தனிக்குழு அமைத்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி