தமிழ்நாடு

விஷத்தால் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழப்பு....

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் விஷம் கலந்த மாமிசத்தை சாப்பிட்டு அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்துள்ளது.

முக்கட்டி கிராமப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு புலி வாயில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியை சுற்றி ஆய்வு நடத்தினர். அப்போது மற்றொரு புலியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு புலிகளையும் ஒன்றாக வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த புலிகளின் வயிற்றில் மாமிசம் இருந்தது, தெரியவந்தது. பிறகு புலிகளின் கால்தடத்தை பின் தொடர்ந்ததில் அதே தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டுப்பன்றி ஒன்று இறந்துகிடந்தது. காட்டுப்பன்றியை ஆய்வு செய்ததில், அதன் உடம்பில் விஷம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தனிக்குழு அமைத்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்