தமிழ்நாடு

காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு...

திருவாரூரில் கோயிலில் இருந்து காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்த காத்தவராயன், ஆரியமாலா உள்ளிட்ட 5 ஐம்பொன் சிலைகள், கடந்த 2017-ம் ஆண்டு திருடு போயின. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கோயிலின் அருகே உள்ள குளத்தை தூர்வாரிய போது, காணாமல் போன சின்னான் மற்றும் விநாயகர் ஆகிய இரண்டு சிலைகள் மீட்கப்பட்டன. இதனிடையே, திருவாரூரை அடுத்த சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் என்பவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், வள்ளிக்கந்தன் என்பவரது வீட்டில் இருந்து இரண்டு சிலைகளையும், ரீட்டாமேரி என்பவரின் வீட்டிலிருந்து மற்றொரு சிலையையும் போலீசார் கைப்பற்றினர். இந்த சிலை திருட்டில் தொடர்புடைய கோயில் கணக்காளராக பணியாற்றிய ரமேஷ் மற்றும் பாலா, மணிவண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு