தமிழ்நாடு

காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு...

திருவாரூரில் கோயிலில் இருந்து காணாமல் போன 3 ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்த காத்தவராயன், ஆரியமாலா உள்ளிட்ட 5 ஐம்பொன் சிலைகள், கடந்த 2017-ம் ஆண்டு திருடு போயின. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கோயிலின் அருகே உள்ள குளத்தை தூர்வாரிய போது, காணாமல் போன சின்னான் மற்றும் விநாயகர் ஆகிய இரண்டு சிலைகள் மீட்கப்பட்டன. இதனிடையே, திருவாரூரை அடுத்த சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் என்பவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், வள்ளிக்கந்தன் என்பவரது வீட்டில் இருந்து இரண்டு சிலைகளையும், ரீட்டாமேரி என்பவரின் வீட்டிலிருந்து மற்றொரு சிலையையும் போலீசார் கைப்பற்றினர். இந்த சிலை திருட்டில் தொடர்புடைய கோயில் கணக்காளராக பணியாற்றிய ரமேஷ் மற்றும் பாலா, மணிவண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்