தமிழ்நாடு

மின் தடை புகாருக்கு மிரட்டல்.. தந்தி டிவி செய்தியால் மின் ஊழியர்களுக்கு தக்க பாடம்

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கீழ்ப்பட்டு பகுதியில் தொடர் மின் தடை எனப் புகார் அளித்த நபரை மிரட்டிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர் மின் தடை குறித்து மின் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு ஒரு நுகர்வோர் புகார் அளித்ததைக் கண்டித்து, அவரின் வீட்டிற்கு சென்று ராஜா மற்றும் முருகன் ஆகிய 2 மின்வாரிய பணியாளர்கள், மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, தந்தி தொலைக்காட்சி வாயிலாக வெளியான செய்தி எதிரொலியாக, மின்வாரிய பணியாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்து போளூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை