தமிழ்நாடு

Tiruchendur திருச்செந்தூருக்கு படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..அப்படி என்ன விசேஷம் இன்று?

thanthitv

திருச்செந்தூருக்கு படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்... அப்படி என்ன விசேஷம் இன்று? திருச்செந்தூர் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முருகனை வழிபட உகந்த நாளாக கருதப்படும் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் கடலில் நீராடி சுமார் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் திருவிழா போல காட்சியளிக்கிறது.

FIFA World Cup | Trump| Messi | அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது

Sabari Varman Death | சபரிவர்மன் மரண வழக்கு.. காவல்துறை கையில் எடுத்த அடுத்த திட்டம்

Palani temple land scam | பழனி மோசடி வழக்கில் திருப்பம்.. சீல் வைத்த CBCID

Director Cheran | Election | Writer | தேர்தலில் இயக்குனர் சேரன் அபார வெற்றி

TVK | IUML | TN Politics | தவெக-IUML கூட்டணி..பிரஸ்மீட்டில் உறுதியாக அடித்து சொன்ன அமைச்சர் ஷாஜகான்