தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இது ஜனநாயக நாடா?, போலீஸ் சர்வாதிகார நாடா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இது ஜனநாயக நாடா?, போலீஸ் சர்வாதிகார நாடா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

தந்தி டிவி
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி அவரின் மனைவி சத்யபாமா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜாமினில் விடுதலை செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகம் ஜனநாயக நாடா அல்லது போலீஸ் ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்