தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இது ஜனநாயக நாடா?, போலீஸ் சர்வாதிகார நாடா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இது ஜனநாயக நாடா?, போலீஸ் சர்வாதிகார நாடா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

தந்தி டிவி
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி அவரின் மனைவி சத்யபாமா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜாமினில் விடுதலை செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகம் ஜனநாயக நாடா அல்லது போலீஸ் ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்