தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், கூடுதல் இழப்பீடு கோரியும், போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், ரஜினி என்பவர் உள்ளிட்ட 15 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மேலும், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு