Thoothukudi | Tiruchendur Murugan Temple | தூத்துக்குடியில் கிடைத்த அரிய வரலாற்று பொக்கிஷம் ஆதிநாதபுரத்தில் அரிய செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய செப்புப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோயிலின் நிலம் 9 குடும்பர்களுக்கு விலைக்கிரையமாக வழங்கப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த செப்புப்பட்டயம் அக்கால சமூக அமைப்பு, கோயில் நிர்வாகம் பற்றி வெளிப்படுத்துவதாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.