தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி உடலை 6வது நாளாக வாங்க மறுப்பு தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில், 12ம் வகுப்பு மாணவி படுகொலையை கண்டித்து, 6வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பின்தலையில் காயம் இருந்ததும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, காவல்துறை உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேடநத்தம் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக காவல்துறையினர் சோதனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.