தமிழ்நாடு

குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டிநகர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஒடுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டிநகர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஒடுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். கொசுக்கள் உற்பத்தி ஆகி, அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கு வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்தனர். குறிப்பாக குழந்தைகள், பல்வேறு நோய்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். எனவே, இங்கு தேங்கி நிற்கும், கழிவுநீரை உடனடியாக அகற்றி, தார்சாலை போட்டு, கழிவுநீர் ஓடை அமைத்து தர வேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள், கோரிக்கை விடுத்தனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC