தமிழ்நாடு

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு - கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கீழ செக்காரக்குடியை சேர்ந்த சோம சுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிராஜா பாண்டி, பாலா, தினேஷ் ஆகிய நான்கு பேர் வந்துள்ளனர். பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தட்டாப்பாறை காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா