Thoothukudi | Neithal | கரகாட்டம், சிலம்பம் என களைகட்டிய `நெய்தல் கலைத் திருவிழா'
தூத்துக்குடியில் 5-வது ஆண்டாக 'நெய்தல் கலைத் திருவிழா' தொடக்கம் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் 5-வது ஆண்டாக 'நெய்தல் கலைத் திருவிழா' கோலாகலமாகத் தொடங்கியது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி முன்னெடுப்பில் தொடங்கியுள்ள இத்திருவிழாவில், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய உணவு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. முதல் நாள் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.