நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படபிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த பத்துநாட்களுக்கு மேலாக நடைபெற்ற படபிடிப்பு நிறைவடைந்தது. இதனிடையே, சென்னை புறப்பட, நயன்தாரா, தூத்துக்குடி விமான நிலையம் வந்திருந்தார். அங்கு, நயன்தாராவை காண வந்த ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.