Thoothukudi | Harassment Case | கம்பி எண்ணும் டோல்கேட் மேனேஜர் | வாட்ஸ்அப்பில் வேண்டாத வேலை #thoothukudi #harassmentcase #crime #thanthitv பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - சுங்கச்சாவடி மேலாளர் கைது தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த மேலாளர் அவதேஷ் சிங் கைது செய்யப்பட்டார். வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள பெண்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரை விசாரித்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவதேஷ் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.