தமிழ்நாடு

துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடியில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூட்டின்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள், உத்தரவிட்ட தாசில்தார் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது. தேவைப்படுபவர்களை இந்த அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், சிபிசிஐடி போலிசாரிடம் இருந்து பெற்ற 179 ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்