தமிழ்நாடு

"நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல்" - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டதாகவும், பலர் வேலை இழந்து தவிப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாகக் கூறிய கனிமொழி, தீப்பெட்டி தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தத் தேர்தல், மோடியிடம் இருந்தும், எடப்பாடியிடம் இருந்தும் நாட்டை காப்பாற்றக் கூடியது என கனிமொழி கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை