தமிழ்நாடு

உப்பு கலந்த தண்ணீரால் பெண் தர மறுக்கிறார்கள் - சட்டப்பேரவையில் எம்எல்ஏ பேச்சு

திட்டக்குடி தொகுதியில் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் இளைஞர்களுக்கு பெண் தர மறுப்பதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் தெரிவித்தார்.

தந்தி டிவி

திட்டக்குடி தொகுதியில் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் இளைஞர்களுக்கு பெண் தர மறுப்பதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் தெரிவித்தார். உப்பு தண்ணீரை குடிப்பதால் மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தண்ணீர் பிரச்சினையை போக்க கொள்ளிடம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கால்நடைகளுக்கு 15 ஆயிரத்து 500 குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், திட்டக்குடி தொகுதியில் நல்ல தண்ணீருடன் தொட்டி அமைக்கப்படும் எனவும், கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்