தமிழ்நாடு

யானை உயிரிழப்புக்கு காரணம் இது தான் - விலகிய மர்மம்

தந்தி டிவி

நெல்லை கோதையாறு பகுதியில் இறந்து கிடந்த யானை, எவ்வாறு உயிரிழந்தது என்ற மர்மம் விலகி உள்ளது.

நீலகிரி ஓவேலி பகுதியில் 12 பேரை தாக்கி கொன்ற காட்டு யானை ராதாகிருஷ்ணன், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில், அது நெல்லை கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி அணைப்பகுதி அருகே யானை இறந்து கிடந்தது. அதன் காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவலாக பேசப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து யானை விழுந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, யானையின் மண்டை ஓடு மற்றும் உடலின் பல இடங்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள், யானை உயிரிழக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்