Thiruvotriyur | Power Cut | 7 மணி நேர மின்வெட்டு - திருவொற்றியூரில் பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை திருவொற்றியூரில் 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... மின்வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், "மின் கட்டணம் கட்டிவிட்டு சாலையில் நிற்க வேண்டுமா?" என்று முழக்கமிட்டனர். மின்சாரம் வந்த பிறகே கலைந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.