தமிழ்நாடு

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனிப்பு கடை உரிமையாளரின் புதிய முயற்சி...

திருவாரூரில், மழை நீரை சேகரித்து அதன் மூலம் தன் கடையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் இனிப்பு கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

திருவாரூர், அண்ணா சாலையில் இனிப்பு கடை நடத்தி வரும் ராகுல்

தன், கடையின் கூரை மீது விழும் மழை நீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேகரித்து வருகிறார். இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீரை கொண்டே இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தன் கடையில் தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு அதிக சுவை கிடைப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிக்கவும் இந்த நீரையே வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி