திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துக்குமரன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், எல்கேஜி மற்றும் யூகேஜி குழந்தைகள் 34 பேருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.