தமிழ்நாடு

திருவாரூர் : கஜா புயல் நிவாரண தொகையில் மோசடி - கிராம நிர்வாக அலுவலர் மீது மக்கள் புகார்

திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கியதில் கிராம நிர்வாக அலுவலர் முத்து, மோசடி செய்ததாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.

தந்தி டிவி
திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கியதில் கிராம நிர்வாக அலுவலர் முத்து, மோசடி செய்ததாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார். திருவாதிரை மங்கலம் பகுதி மக்கள், இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தனர். 3 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை மோசடி செய்தததோடு, நிவாரண பொருட்கள் வழங்குவதிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட, கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்திட்டு மோசடி செய்த ஆவணங்களையும் அந்த புகார் மனுவுடன் அவர்கள் இணைத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"